சாவகச்சேரியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரரின் சடலம் மீட்பு


சாவகச்சேரி தனங்கிளப்பு இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாவகச்சேரிப் பொலிஸாரால் சாவகச்சேரி நீதி மன்றத்தில் தனங்கிழப்பு இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரரின் சடலம் காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி பதில் நீதவான் அலெக்ஸ்ராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வி.பி.ஜி.எம். நிசாந்த சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments: