இலங்கை பங்குச் சந்தைக்கு நேற்று 100 பில்லியன் ரூபா நட்டம்


இலங்கை பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் நேற்று மட்டும் நடைபெற்ற பங்குப் பரிவர்த்தனையின் மூலம் சுமார் 14 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக இந்த வருடத்தில் 104.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 938 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட மூலதனவர்க்கம் தற்போது 240 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

நிறுவனங்களின் வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தமையே இந்த பங்குச் சந்தை நெருக்கடிக்குப் பிரதான காரணியென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுக்கும் இராணுவ முன்நகர்வுகளின் காரணமாக முதலீட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஸ்ரீலங்கா ரெலிகொம், ஜோன் கீல்ஸ், டயலொக் டெலிகொம் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குப் பெறுமதி வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: