இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்கள் நிலையினை விளககவும், மத்திய அரசு தலையீட்டைக் கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் பொதுக்கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. |
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறிய இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியில் நாளை மறுநாள் நடைபெறும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அழைக்கப்படவில்லை. அதுகுறித்து தனது மனவருத்தத்தினை மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, 1991 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருந்த காரணத்தால்தான் தனது ஆட்சி கலைக்கப்பட்டது, அதற்கு முன்னர் திமுக உறுப்பினர்கள் இலங்கைத் தமிழருக்கு இழைககப்படும் இன்னல்களைக் கண்டித்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள், தவிரவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக, தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பதையெல்லாம் நினைவு கூர்ந்திருககிறார். |
இலங்கை பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை விளக்க திமுக 6 ஆம் திகதி கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment