வன்னிக்களமுனையில் ஈரான் கொடுத்த இரசாயண போராயுதமான மஸ்ரட் வாயு பயன்பாட்டுத் தவறினால் 47 இராணுவத்தினர் பலி நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

கடந்த மூன்று தினங்களின் முன்னர் வன்னிக்களமுனையில் ஈரான்
அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இரசாயண ஆயுதங்களை கையாண்டதில்
ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது 47 இராணுவத்தினர்
கொல்லப்பட்டு தென்னிலங்கைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் அனேகமானோர் எரிகாயங்களுடனும் கண்கள் கருகிய
நிலையிலும் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களது உடலங்களை
பார்ப்பதற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தென்னிலங்கையிலுள்ள இராணுவ செய்தித்தடை காரணமாக
இச்செய்தியை வெளியிடுவதில் சிங்கள பத்திரிகையாளர்கள் பின்
நிற்பதாக தெரியவந்துள்ளது. இதே வேளை இந் நாசகார ஆயுதமான
மஸ்ரட் காஸ் ஈரான் அரசினால் சிறிலங்கா அரசிற்கு கொடுக்கப்பட்டு
இருப்பதையும் தென்னிலங்கை பத்திரிகையாளர் உறுதிப்படுத்துகின்றார்.
இவ் இரசாயண ஆயுதபாவனை தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை
பிரதான எதிர்க்கட்சிக்கு கொடுக்கப்பட்டிருப்பதோடு போப்பாண்டவருக்கும்
அறிவித்திருப்பதாக தெரிய வருகின்றது. இத்தவறினார் 500 க்கும் மேற்பட்ட
சிறிலங்கா இராணுவத்தைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக
உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் வந்துள்ளன.

இதன் மூலம் சிறிலங்கா அரசு வன்னிக்களமுனையில் இரசாயண
ஆயுதம் பாவிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ் இரசாயண
ஆயுதங்களுடன் சிக்குன்குனியா நொயை பரப்பக்கூடிய உயிரியல்
இரசாயண ஆயுதங்களும் ஈரானால் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இச்செய்தி தொடர்பில் உண்மைத்தன்மையை கருத்தில் கொண்டு
உலகத்தமிழர்கள் இதற்கு எதிரான வெளிப்பாடுகளை உலகெங்கும்
செய்யும்படி நிதர்சனம் கேட்டுக்கொள்கிறது.

நன்றி - நிதர்சனம்

No comments: