இலங்கை தமிழருக்கு எதிராக இந்திய மத்திய அரசு செயற்படவில்லையாம் – காங்கிரசுக்காகவும் பதவிக்காகவும் வக்காலத்து வாங்கும் வீ. தங்கபால


இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்திய மத்திய அரசு செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழக காங்கிரஸ் தலைவர் வீ தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இலஙகைத் தமிழர்களது உரிமைகளை வென்றெடுப்பத்கு முன்னாள் பிரதமர் நேரு முதல் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பல்வேறு வகையில் முனைப்புக் காட்டி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சகல தமிழகக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென தமிழக காங்கிரஸின தலைவர் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி தொடர்பில் தவறான எண்ணக்கருவை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் விதைக்க முற்படக் கூடாதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments: