சிறீலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் தமிழீழக் காவல்துறையின் நடுவப் பணியகத்தின் கட்டிடத் தொகுதிகளை இலக்கு வைத்து அகோர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். |
இதன்போது காவல்துறையினரின் கேட்போர்கூடத்தின் பின்பகுதி மண்டபம் முற்றாக அழிவடைந்துள்ளது. சிறீலங்கா வான்படையினரின் யுத்த வானூர்திகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ராதா வான்காப்பு படையினரின் வானூர்தி எதிர்ப்புத் தாக்குதலையடுத்துக் காவல்துறை நடுவப் பணியகத்தின் பிரதான கட்டிடத் தொகுதி தாக்குதலுக்கு உள்ளாகாது தப்பியுள்ளளது. இதேநேரம் அருகில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் களஞ்சியசாலை மீதும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது களஞ்சியப் பகுதியில் கடும் சேதமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்காக அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன நாசமடைந்தன நேற்று அரசியல்த்துறை,சமாதானச்செயலகம் மீதும் விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
தமிழீழ காவற்துறை நடுவப் பணியகத்தின் மீது இலங்கை வான்படை தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment