கடந்த சனியன்று (செப்27) சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கெதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இராணுவத் தீர்வு சாத்தியமில்லை. இலங்கை இராணுவத்திற்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து இராணுவப் பொறியியலாளர்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இத்தகைய செயலைத் தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு செய்துள்ளதைக் கண்டிக்காமல் கருணாநிதி மௌனம் காப்பது கண்டனத்திந்குரியது.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment