நோர்வேயில் மாபெரும் கவனயீர்ப்பு நடவடிக்கை


தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதலைகளைக் கண்டித்து, நோர்வேயில் அடையாள உண்ணாநிலை, மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் இன்று திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு ஆரம்பித்துள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் நோர்வே செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


நோர்வே நாடாளுமன்ற முன்றலில் ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணி வரை 32 மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.


தமிழீழ மக்களின் மனித அவலத்தை அறிந்திருந்தும், பாராமுகமாய் இருக்கும் உலகின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் முகமாக இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

.

நோர்வே நாடாளமன்றத்திற்கு முன்பாக இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு போரட்டமும் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை தொடரவுள்ளது.

பெரியவர்கள் பெண்கள் என 20 வரையான தமிழீ உறவுகள் காலை 8.00 மணியிலிருந்து அடையாள உண்ணா நிலையை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, நுற்றுக்கனக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் நோர்வே நாடாளமன்றம் முன்பாக அணி திரண்டுள்ளனர்.

நாளை 10மணி முதல் 15 மணி வரை உண்ணாநிலைப் போராட்டத்துடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அதே இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவான தமது ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்தவுள்ளனர் என நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.



No comments: