இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை அவசியம் - கனடா

இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் பரஸ்பர மரியாதை, அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை, அசாதாரணமான திடசங்கற்பம் என்பன அவசியமாகிறது என கனேடிய லிபரல் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் பொப்ரே தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து பகைமையை களைய கனடாவினால் முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுட்டிக் காட்டி உள்ளார்.


இலங்கையின் யுத்தம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தன்னார்வு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாது என்ற அடிப்படையில் அவர்களை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றியமையில் இருந்து இதனைத் தெளிவாவதாக புரிந்து கொள்ள முடியும் எனவும்; குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தற்போது ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலைமையை பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமே கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக சுயாதீனமான கண்காணிப்புக் குழு ஒன்றின் ஊடாக நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டியது அவசியம் என்பதனை போப் ரே சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பொறுத்தமாட்டில் உலகின் மிக அபாயகரமான நாடுகளின் பட்டியலில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் இலங்கையின் பெயரையும் இணைத்துள்ளது. இந்த நிலைமை ஆரோக்கியமான நிலைமையாக கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனநாயக சூழ்நிலை குறித்து சர்வதேச ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை போன்றவை தொடர்பாக கனடா கவனம் செலுத்த வேண்டும் என லிபரல் கட்சி சார்பில் பொப் ரே கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனால் இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான முனைப்புகள் உடனடியாக எடுக்கப்படல் வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற ஜனநாயகம், மனித உரிமைகள் காப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனையே கனடா எதிர்ப்பார்க்கிறது.

இதனை விடுத்து 10 ஆயிரம் கிலோமீற்றர் அப்பாலில் இருந்துகொண்டு கனடா இந்தப்பிரச்சினையில் பங்காளியாக இருக்கவோ அல்லது விரலை சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதையோ விரும்பவில்லை என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் போப் ரே குறிப்பிட்டுள்ளார்.

No comments: