வன்னேரிக்குளம், ஆன்டான்குளத்தில் படையினர் ஐவர் பலி, 19 பேர் காயம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம், மற்றும் ஆன்டான்குளம் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் படை அதிகாரி ஒருவர் உட்பட படையினர் ஐந்து பேர் கொல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


இதன்போது மேலும் 19 படையினர் காயமடைந்திருப்பதாகவும் அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இந்தப் பகுதிகளில் நேற்று கடும் மோதல்கள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளது.


இதேவேளை, வன்னேரிக்குளம் மேற்கு களமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக, விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: