காத்தான்குடியில் கைக்குண்டுத்தாக்குதலில் சிறுவர்கள் காயம்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்தக் கைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைநேர பிரார்த்தனையில் ஈடுபட்ட முஸ்லீம்களே இந்த கைக்குண்டுத் தாக்குதலின் இலக்கு எனக் கூறப்படுகிறது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் தற்போது பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிஙறது.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி நகரில் உள்ள மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களே கைக்குண்டுகள் இரண்டினை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இத்தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு உந்துருளிகளும் சேதமாகியுள்ளன.

காயமடைந்த அனைவரும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: