மகிந்தவின் சாட்சியமில்லா இனவழிப்பு போரைக் கண்டித்து யேர்மனியில் இடம்பெற்ற மாபெரும் கண்டனப் பேரணி


சிறிலங்கா அரசானது வன்னிப்பகுதியிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், வன்னிப் பகுதியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், தாயகத்தில் இடம் பெயர்ந்து அல்லறும் மக்களுக்கான உதவிகளை தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டும்...

என கேட்டு, யேர்மனி வாழ் தமிழீழ மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று 10.10.2008 அன்று வெள்ளிக்கிழமை யேர்மனியின் தலைநகரான பேர்லின் மாநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணியளவில் பேர்லின் மாநகர மத்தியில் உள்ள அலெக்ஸ்ரண்ட பிளட்ஸ் எனும் இடத்தில் ஆரம்பித்த கண்டனப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தலைமை செயலகம் முன்பாக சென்றடைந்தது.

இப்பேரணியில் தாயகத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை விளங்கும் படங்கள், வாசகங்கள் தாங்கிய பதாதகைகள், தாயகத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக யேர்மனி வாழ் தமிழீழ மக்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள், மருந்துவகைகளை தாங்கிய மாதிரி பெட்டிகளையும் சுமந்து சென்றதுடன் தாயக மக்களின் இன்றைய நிலையை எடுத்துரைக்கும் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் யேர்மனி வாழ் ஏனைய சமூகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

யேர்மனியில் பிற நகரங்களிலிருந்து இப்பேரணிக்காக 11 மணி நேரம், 8 மணி நேரம், 6 மணி நேரம் எனப் பேருந்துகளில் பயணித்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ மக்கள் வருகை தந்து தமது உணர்வுகளை யேர்மனிய அரசுக்கு வெளிப்படுத்தினர்.

No comments: