அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 180 பாகை கோணத்தில் இருப்பவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்ததும் குண்டுதாரி தனது உடலின் மார்பு பகுதி மாத்திரம் உள்ளடங்கும் வகையில் வெடிகுண்டு அங்கியை அணிந்திருப்பதே இதற்கான காரணம்.

ஆனால், அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். குண்டுதாரி, உடலின் இரண்டு பக்கங்களும் உள்ளடங்கும் வகையில் வெடி மருந்துகளை பொருத்தி இருந்தமையே இதற்கான காரணம் என இராணுவப் புலனாய்வுதுறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதலின் ஆரம்ப இலக்கு இராணுவத் தளபதி, உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளாக இருக்கலாம் என இராணுவ புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர்.

புலிகள் தற்கொலைத் தாக்குதலுக்கு இவ்வாறான தற்கொலை அங்கியைப் பயன்படுத்திய முதல் முறை இதுவெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி அனுராதபுரத்தின் ஸ்ரீமாபோதி விகாரைக்குச் சென்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா உள்ளிட்ட அதிகாரிகளை இலக்கு வைத்து இந்த தற்கொலை தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம் எனவும் இராணுவ புலனாய்வுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்புக் காரணமாக தற்கொலை குண்டுதாரிக்கு பூஜைகள் நடைபெறும் இடத்தை நெருங்க முடியாத நிலையில் தாக்குதல் இலக்கை மாற்றியிருக்கலாம் எனவும் புலனாய்வுதுறையினர் கூறியுள்ளனர்.

No comments: