இந்தியாவின் எச்சரிக்கைக்கு இலங்கை மசியாவிடில் மத்திய அரசின் ஆட்சி வேண்டுமா என தி.மு.க. தீர்மானிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை

இந்திய மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலக நேரிடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அர சாங்கம் நடத்தும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற இந்திய(மத்திய) அரசின் எச்சரிக்கைக்கு அந்த நாடு செவிசாய்க்கா விடில் மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்பது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மறு பரிசீலனை செய்யும்.
மயிலாப்பூர், மாங்கொல்லையில் இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் அரச படை களால் கொலைசெய்யப்படுவதை கண்டித்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையிலேயே முதலமைச்சர் மு.கருணாநிதி மேற்கண்டவாறு எச்சரித்தார்.
இலங்கையில் நடைபெறும் இனப்பிரச் சினையை முடிவுக்கு கொண்டுவரப் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் துரிதமாக செயலாற் றுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
""அவர்கள் ஒத்துழைப்பு நல்கினால் எங்களுக்கு வாழ்வுண்டு. அவ்வாறில்லை யென்றால் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் தமிழர்களும் அழிவார்கள்' என்று உணர்ச்சி பொங்க ஆவேசமாக தமது உரையை முடித்தார் கலைஞர் கருணாநிதி.ஈழத் தமழர்களின் பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்றை காண்பதற்கு தமிழ கத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

No comments: