அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேர் பலி

அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.45 அளவில் இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கிளையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டபோது இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மற்றும் அவரது பாரியார் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் டொக்டர் ராஜா ஜோன் புள்ளே ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அவரது பாரியார் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் டொக்டர் ராஜா ஜோன் பொர்னாண்டோ புள்ளே ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது

No comments: