தமிழ்நாட்டின் எதிர்ப்பு காரணமாக இந்திய மத்திய அரசு இலங்கைக்கு எதிரான போக்கை வெளிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக இந்தியா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, இன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகர், ஜி; ஜி டி ஏ பளிதாகனேகொடவிடம் மனு ஒன்றை கையளித்துள்ளார். இதில் இலங்கையின் தமிழ்பகுதிகளில் படையினரின் தாக்குதல்கள் காரணமாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக இந்தியா தமது கவலையை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் சேதங்கள், ஏற்படுவதும் விரும்பத்தக்கதல்ல என்றும் எம் கே நாராயணன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடிய போது கருணாநிதி அளித்த விளக்கங்களை அடுத்தே இந்திய மத்திய அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: