பிரிதானிய பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வில் 5000 ற்கும் மேற்பட்ட மக்கள்

இன்று பிரிதானிய பாராளுமன்றம் முன்பாக மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை பிரித்தானிய தமிழர் பேரவையினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பிரித்தானிய தமிழர்கள் உனர்வுபூர்வமாக கலந்துகொண்டது, குறிப்பிடதக்கவிடையமாகும்
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தரை மற்றும் வான் தாக்குதல்களினால் தமிழ் மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று நடத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் வான் குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 230,000த்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் இடம்பெயர்ந்து வாழ்வதாகவும், பிரித்தானிய தொடர்ந்தும் மௌனம் காக்காது இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழர்கள் மீதான குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், தமிழர் இன ஒடுக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், இலங்கைக்கு எதிராக பிரித்தானிய தடைகளை விதிக்க வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜோன் மெக்டொனல், விரேந்திர சர்மா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: