இந்தியப் பிரதமர் தலையிட வலியுறுத்தி லட்சக்கணக்கில் தந்தி: தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பதகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இனவெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பு போன்றதாக இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
"இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்" என்ற வாசகத்துடன் லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: