மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்- மனைவி உட்பட 28 பேர் பலி 80 பேர் படுகாயம் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - UNP

மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவிலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் ஜானகப் பெரேராவின் மனைவி உள்ளிட்ட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாக பெரேரா மீது இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்;பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரத்திலுள்ள எதிர்க்கட்சி தலைமையகத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதலில் ஜானக பெரேரா, அவருடைய மனைவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் வைத்தியர் ஜோன் புள்ளே ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


அண்மையில் நடைபெற்ற வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் ஜானக பெரேராவே அந்த மாகாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இவர் தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு அண்மையில் மீண்டும் சிறீலங்கா இராணுவ வீராங்கனை ஒருவரை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா முன்னாள் ராணுவத் தலைமை அதிகாரியான அவர் அவுஸ்திரேலியா,இந்தனேசியா நாட்டு உயர்ஸ்த்தானியரும் ஆவார் பின்பு வடமத்திய மாகான எதிர்க்கட்சித் தலைவரானார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜானக பெரெரா கொழும்பு ஜோசப் கல்லூரியில் கல்வி கற்ற அவர் 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து றோயல் இராணுவ கல்லூரியில் ஆரம்ப பயிற்ச்சி பெற்ற அவர் ராணுவப் பொறியியல் பிரிவில் 2வது லெப்டினனாக இனைந்த அவர் பாதுகாப்புப் பட்டதாரியுமாவார்.

யாழ்பாணத்தில் நடந்த நூற்றுக்கணக்கானோரின் காணாமல் போதல் மற்றும் செம்மணி படுகொலைகள், மாணவி கிருசாந்தி குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டமை உட்பட,1988- 89 களில் ஜேவிபியின் சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதிலும் முக்கிய சூத்திரியாக செயற்பட்ட இவர் ஒரு போர் குற்றவாளியாக கருதப்பட்டவர்.

அவுஸ்ரேலிய தூதுவராக இருந்த காலத்தில் புலிகளை அவுஸ்ரேலியாவில் தடை செய்வதற்கான மூல காரணமாக செயற்பட்டவர்.இவர் போர் குற்றவாளியாக இவர் மீது எழுந்த புகார்களையடுத்து அவுஸ்ரேலியாவிலிருந்து விலக்கப்பட்டார்.

பின்னர் இந்தோனேசிய தூதுவராக செயற்பட்ட காலத்திலும் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தீவிரமாக செயற்பட்டவர் எனவும் தெரிய வருகிறது.இவர் கொல்லப்பட்டதானது இப்போதய சூழலில் பொருத்தப்பாடானதாக இல்லாதபோதும் முன்னய குற்றவாளிகள் இன்னமும் மறக்கப்படவில்லை என்பதையே கோடிட்டு காட்டுவதாக தென்னிலங்கை பத்தியாளர் தெரிவித்தார்.

இவர் தமிழர்களை மட்டுமல்லாது சிங்களவர்களையும் தனது எதிரியாக தேடி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அண்மைக்காலத்தில் சிறிலங்கா இராணுவ கட்டமைப்பையும் மிக கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

அத்துடன், வடமத்திய மாகாணசபைத் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் வைத்தியர் ஜோன் புள்ளேயின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அவருடைய வாகனம் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மீது ஜோன் புள்ளே வழக்குத் தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை ஜானக பெரேரா அண்மைக்காலமாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுரதபுரக் குண்டுவெடிப்பு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - UNP

அனுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பின் போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் ஜானக்க பெரேரா மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை, அவரின் பாதுகாப்பைக் குறைத்த இந்த பாதுகாப்பு அமைச்சும் ஏற்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் குண்டு வெடிப்புத் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜானக்க பெரேரா தனது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தது.
கடந்தகால நிலைமைகளை நோக்கும் போது, இந்தக் கொலை தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. அரசாங்க அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மரணம், மகேஸ்வரனின் மரணம் போன்ற மரணங்கள் தொடர்பில் வினைத்திறனான விசாரணைகள் நடத்தப்படவில்லை. இந்த நிலைமையில் இந்த சம்பவம் குறித்தும் உரிய விசாரணையை அரசாங்கம் நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: