வன்னிக் களமுனைகளில் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 62 படையினர் பலி;72 பேர் காயம்: விடுதலைப் புலிகள்


கிளிநொச்சி மாவட்டம் தெற்குப் பிரதேச அக்கராயன்குளம் முறிகண்டி பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் நடைபெற்ற மோதல்களில் இலங்கைப் படையினர் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 49 படையினர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் வன்னிவிளாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 16 படையினரும் வன்னேரிக்குளத்தில் 20 படையினரும் கொல்லப்பட்டனர். இவ்வாறு மூன்று களமுனைகளிலும் மொத்தமாக 62 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் அக்கராயன்குளம் பகுதியில் 49 படையினரும் வன்னிவிளாங்குளம் பகுதியில் 23 படையினரும் காயமடைந்துள்ளனர்.

இம்மோதல்களில் புலிகளின் அகோரத் தாக்குதலால் படையினர் தமது பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதன்போது விடுதலைப்புலிகளால் படையப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாரிய தாக்குலையடுத்து படையினர் கிளிநொச்சி புறநகர்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆட்டிலறித் தாக்குதல் பல்குழல் பீரங்கித்தாக்குதல் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு நேற்று செவ்வாயக்கிழமை மாலை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

No comments: