ஈழத்தமிழ் மக்களிற்காக உயிரையும் கொடுப்போம் : கலைஞர் கூறியதாக கனிமொழி

E-mail Print PDF

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஈழத்தமிழர் பிரச்சினையில் "தி.மு.. நிலையும்-மத்திய அரசுக்கு வேண்டுகோளும்" என்ற தலைப்பில் சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் சிறப்புரையாற்றிய கலைஞர் கருணாநிதி, ஈழத்தில் தமிழ் மக்கள் மடிந்தால், அவர்களுடன் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து மடியத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருப்பதாக, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.


தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டிப்பதாகவும், இதனாலேயே முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நேற்று பல இலட்சக்கணக்கான மக்கள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பி வைத்திருப்பதாகவும், கனிமொழி கூறினார்.


தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி விடுத்த போராட்ட அழைப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஏனைய பல கட்சிகளும், அமைப்புக்களும் ஆதரவு கொடுத்திருப்பது, ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் அனைவரும் ஓரணியில் நிற்பதை எடுத்துக்காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.


இதேவேளை, தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுதல், தாக்கப்படுதல் என்பவற்றைக் கண்டித்து, முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் M.K.நாராயணன் இந்தியாவிற்கான சிறீலங்கா தூதுவரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.








No comments: