பழுத்த அனுபம் மிக்கதும், யுத்த தந்திரோபாயங்களை நுட்பமாக முன்னெடுக்கக்கூடியதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும்

E-mail Print PDF
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என சர்வதேச யுத்த ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பழுத்த அனுபம் மிக்கதும், யுத்த தந்திரோபாயங்களை நுட்பமாக முன்னெடுக்கக்கூடியதுமான அமைப்பாக விடுதலைப் புலிகளை குறித்த ஆய்வேடு சித்தரித்துள்ளது.

மேலும், இராணுவப்படையினர் சற்று அயரும் சந்தர்ப்பத்தில் மிக மோசமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்தே படையினர் வேகமான முன்நகர்வுகளை தவிர்த்து நிதமானமாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறும் வரை அரசாங்கத்திற்கு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது சுலபமானதாக அமையாதென அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

No comments: