ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி

அதிகரித்துவரும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்கு மத்தியில், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்கானல். தமிழாக்கம்.

இந்திய மத்திய அரசிடமும் , குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புலிகளின் மீதுள்ள தடையை நீக்குமாறு ப.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இனியும் பயங்கரவாத இயக்கமாக நோக்கவேண்டாம் எனவும் தாம் இந்தியாவுக்கு எதிரிகள் அல்ல எனவும் பகிரங்கமாக அவர் தெரிவித்திருப்பது, இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கின்றது.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது உண்மையான நண்பர்களை இனம்கானவேண்டும் என்றும், சிங்கள இராணுவத்திற்கு பல அதிர்ச்சி தாக்குதல்கள் காத்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் இலங்கை இராணுவம் தாம் புலிகளை வெற்றிகொண்டதாக அறிவித்த பின்னர் பல முனைகளில் தாக்குதலுக்குளளாகி சின்னாபின்னமான பல வரலாறுகளை நினைவுகூர்ந்தார் ப.நடேசன் அவர்கள்.

No comments: