சிறீலங்கா கடற்கடையினரின் வடபுல பிரதான கடல்வழி வழங்கல் தளமான காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினரின் வழங்கல் கப்பல் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலை 5:10 அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலி சிறப்பு தாக்குதல் அணியினர் காங்கேசனதுறை துறைமுகத்தில் தரித்து நின்ற றுஹுன (Ruhuna), மற்றும் நிமலாவ (Nimalawa) ஆகிய இரு பிரதான படைத்துறை வழங்கல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மற்றைய கப்பலான எம்.வி. றுகுணுவ பலத்த சேதங்களுடன் சிறிலங்கா கடற்படையினரால் கட்டியிழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் உணவு விநியோகத்துக்கு இந்த கப்பல்களை பயன்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவ வழங்கல்களை இந்த கப்பல்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை இந்த கப்பல்கள் படையினருக்கான தமது வழமையான வழங்கல் பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற வேளை, கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலில் எம்.வி. நிமல்லாவ கப்பல் தீப்பற்றி எரிந்தவாறே மூழ்கத்தொடங்கியது. எம்.வி. றுகுணுவ கப்பல் கடும்சேதங்களுக்குள்ளானது. கரையிலிருந்து விரைந்து வந்த சிறிலங்கா கடற்படையினர் அதை மூழ்கவிடாது கரைக்கு இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment