எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் ஆட்சியமைக்கும் கட்சிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
இலங்கையைச் சேர்ந்த 400,000 த்திற்கும் மேற்பட்டோர் கனடாவில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு நிலவரத்தை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்கள் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடாவின் லிபரல் கட்சி இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை ஓரளவு நியாயமாக அணுகக் கூடிய கட்சி எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கனடாவில் குடியேறிய இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். |
கனடிய பொதுத்தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் இலங்கைத் தமிழர்களின் வாக்குகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment