கொழும்பில் ஆட்பதிவில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் உளவு நடவடிக்கை



கொழும்பில் கடந்த 5 வருடங்களாகத் தங்கியுள்ள வடக்குப் பகுதி தமிழர்கள் தொடர்பான பதிவுகள் சிறீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன.


இன்று காலை 8:00 மணிமுதல் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் பதியப்பட்டன.


சிறீலங்கா காவல்துறையினரது இந்த நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழ் மக்கள் பதிவுகளை மேற்கொள்ள சென்ற காவல் நிலையங்களில், வட பகுதிகளைச் சேர்ந்த துணைப்படைக் குழு உறுப்பினர்களும், தமிழ் விரோத சக்திகளும் பொது உடையில் நின்று மக்கள் மத்தியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.


பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது விபரங்களைப் பதிவு செய்வதற்கு ஒரு நாள் அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டிருந்ததாக, அனைத்துலக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


அத்துடன், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இன்றைய ஆட்பதிவைப் படம்பிடிக்கவும் சிறீலங்கா காவல்துறையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

No comments: