யாழில் இளைஞன் சுட்டுக்கொலை


யாழ் மாவட்ட செயலகப் பகுதிக்கு அருகாமையில் வாலிபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் குமாரராஜ் என்பவராக இருக்கக் கூடும் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தேசிய அடையாள அட்டையில் குறித்த தகவல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி பலியானவரின் சடலம் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments: