மஹசீன் சிறைச்சாலையில் இராணுவத்தினர் திடீர் பிரவேசம் சோதனை என்ற போரர்வையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர்
மஹசீன் சிறைச்சாலையில் இன்று இலங்கை நேரம் 12 அணியளவில் உட்புகுந்த 20 இராணுவத்தினர் தமிழ்க் கைதிகளை இம்சைப்படுத்தியதாக தமிழ்ச் செய்திகளுக்கு உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதனை உறுதிப்படுத்தினார்.இன்று நன்பகல் அங்கு சென்ற இராணுவத்தினர் தமிழ்க் கைதிகள் 60 பேரின் சிறைக் கூடங்கள் மற்றும் அவர்களின் உடமைகளைச் சோதனையிட்டுள்ளனர். வழமைக்கு மாறான இந்த நடவடிக்கை குறித்து தமிழ்க் கைதிகள் எதிர்ப்பு வெளியிட்ட போது அவர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் தூக்கி வீசப்பட்டு பல்வேறு அசௌகரியங்களைப் படையினர் ஏற்படுத்தியதாக தனக்கு முறையிட்டுள்ளதாக அரிய நேத்திரன் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி நீதி அமைச்சர் புத்திரசிகாமணியிடம் தான் முறையிட்டதாகவும் அவர் குறித்த அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து மகசீன் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளிடம் மன்னிப்புக் கோரியதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறமாட்டாது என அவ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் கைதிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment