இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் தேவை : இராமதாஸ்

சிறீலங்காவுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்த வேண்டுமென, உநிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியும், இலங்கை தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது இதில் பேசிய இராமதாஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ் காந்தி முயற்சித்த போதிலும், அவருக்கு சரியான ஆலோசனை கூறப்படவில்லை என்வும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.இந்தியாவின் ஏனைய மாநிலத்தினர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் வெகுண்டுழுந்து விடுவார்கள் எனவும், ஆனால் ஒரு இனமே இலங்கையில் பாதிக்கப்படும்போது தமிழ்நாட்டு தமிழர்கள் தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் மருத்துவர் இராமதாஸ் கூறினார்.
ஈழத் தமிழனுக்கும், நமக்கும் இருப்பது தொப்புள்கொடி உறவு எனவும், அதனால் இந்த பிரச்சினையை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

மருத்துவர் இராமதாஸ் மேலும் பேசியவை:

முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதை அதிமுக, மதிமுக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்து உள்ளார்கள். அவர்களும் கூட்டத்திற்கு சென்றிருக்க வேண்டும். அங்கு போய் குறைகளைக் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.ஈழத் தமிழர் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்ட முடிவை பாமக ஆதரிக்கிறது. இனியாவது ஒன்றாக குரல் கொடுப்போம். இலங்கை பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்னும் ஒரு மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இலங்கையில் என்ன அரசியல் தீர்வு எடுக்கப்பட்டது என கேட்க வேண்டும்.இலங்கையுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்றார்.

No comments: