உலகத் தமிழர்களின் பேரன்பிற்கும் மதிப்புக்குமுரிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கட்கு

ஐயா!

இலங்கை மண்ணில், கேட்பாரற்ற நிலையில் தினம்தோறும் சிங்களப் பேரினவாத கடும்போக்காளர் - அதிகாரிகள் - இராணுவத்தினரால் இனப்படுகொலை செய்யப்படும் எம் ஈழத்தமிழ் உறவுகள் இனியும் களப்பலியாகி மாண்டு மடியக்கூடாது.

அவர்களை காப்பாற்றியாக வேண்டுமென, எம் தாய்த் தமிழ் இனத்தின் தலைமைகளின் தலைவரான தங்களின் தலைமையிலேகூடி எடுத்த தீர்மானமும், இனிவரும் காலங்களில் தாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளும் அனைத்துத் தமிழ் மக்களுக்குமான நம்பிக்கை ஒளியைத் தருகின்றது.

ஐயா, எங்கள் ஈழத் தமிழினமும் சுயமரியதையுடன் - சுயநிர்ணயத்துடன் வாழ தாங்கள் பணியாற்ற வேண்டுமென... உலகத் தமிழர்கள் சார்பாகவும்,டென்மார்க் வாழ் தமிழர்கள் சார்பாகவும் இத்தால் டென்மார்க் தமிழ் இலக்கிய மன்றம் தங்களை வேண்டி நிற்கின்றோம்.

தங்கள் பணி தொடர நாம் தங்களையும், அனைத்துக்கட்சி தலைவர்களையும் சிரம் தாழ்தி வாழ்துவதுடன் எங்கள் மனமார்ந்த அன்பையும் தெரிவித்து கொள்கின்றோம்!

நன்றிகளுடன்
த.தர்மகுலசிங்கம்
தலைவர்.
டெ.த.இ.ம.

No comments: