யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்டவர் சிவகுல வீதி உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைச் சேர்ந்த மார்க்கண்டு சுதன்ராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை கிராமசேவரிடம் சென்றுகொண்டிருந்தபோதே அவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment