ஈழத்தமிழர்களை சுரண்டும் திரையுலகம் தங்கர்பச்சான் ஆவேசம்!


தெய்வம் தந்த பூவே. பத்திரிகையாளர் வேணுஜி இயக்கியிருக்கும் டெலி பிலிம் இது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த படம் தாய் பாசத்தை மையமாக கொண்டது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள்

திரையுலக முன்னணி இயக்குனர்களான அமீர், கே.எஸ்.ரவிக்குமார், தங்கர்பச்சான், ஜெயம் ராஜா, சுப்பிரமணியம் சிவா ஆகியோர். இவர்களை தவிர, கூட்டத்தினரை கவர்ந்த மற்றொரு விவிஐபி டாக்டர் கமலா செல்வராஜ்.

ஜெர்மனியை சேர்ந்த சிறுவன் ஆதவன்தான் இப்படத்தின் ஹீரோ. இவனது தாயார் ஆனந்தி ஓரு மருத்துவர். இவரது கதையை உருக்கமாக கூறினார் கே.எஸ்.ரவிக்குமார். இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இனக்கலவரத்தில் தனது சொந்த பந்தங்கள் எல்லோரையும் பறிகொடுத்துவிட்டு கடல் போன்ற தனது வீட்டையும் இழந்தவர் ஆனந்தி. தனது ஒரே சொந்தமான மகன் ஆதவனை மார்போடு அணைத்துக்கொண்டு அந்த நாட்டை விட்டு வெளியேறி இன்று ஜெர்மனியில் புகழ் பெற்ற மருத்துவராக விளங்குகிறார். இந்த அன்னையின் கனவுதான் இந்த படம். நல்லவர்களை தேர்வு செய்து இந்த பட வாய்ப்பை வழங்கியிருக்கிறார் ஆனந்தி. சிறுவன் ஆதவன் எல்லா பெருமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

அங்கே நமது இனம் செத்துகிட்டிருக்கு. புலம் பெயர்ந்த தமிழர்கள் காசில் Deivam Thanda Veeduசாப்பிட்டது போதாது என்று அவ்வப்போது கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சுரண்டிக் கொண்டிருக்கும் நமது திரையுலகம், ஈழத்தில் நடக்கும் படுகொலைக்கு ஒரு குரல் கொடுக்க கூட யோசிக்கிறது என்று ரொம்பவே வேதனைப்பட்டார் தங்கர்பச்சான்.

ஈழம் தொடர்பான இவர்களின் கண்ணீர் சுரப்பியை மேலும் தூண்டியது மோகன்ராஜ் இசையில் உருவான டைட்டில் பாடல். (பிரமாதமான மெலடி) இறுதியாக நன்றியுரைத்த வேணுஜி, “அம்மா-மகனுக்குள்ளே என்ன கதை இருந்தது என்று தெரியாது. நான் தாய் பாசத்தை மையமாக வைத்து ஒரு கதை சொன்னேன். அவர்களுக்கும் பிடித்திருந்தது. எல்லாருக்கும் பிடிச்சிருக்கிற மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்கேன். பார்த்திட்டு சொல்லுங்க” என்றார்.

சீக்கிரம் காட்டுங்க...

No comments: