இலங்கையில் தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் பா.ம.க. தலைவர் கோ.க. மணி கூறியதாவது: தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்த தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ் கட்சியின் செயலாளர் என்.வரதராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரும் இத்தீர்மானத்தை மகிழ்ச்சியோடு வரவேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். |
தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும்: பா.ம.க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment