இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க வரும் 14 ஆம் தேதியன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தினை எதிர்வரும் அக்டோபர் 14ம் நாளன்று கூட்டியிருக்கிறார்.
இலங்கைப் பிரச்சனையில் தனது நிலையை விளக்க கடந்த திங்கட்கிழமை திமுக ஏற்கனவே ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் இது தொடர்பாகப் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்பு வந்துள்ளது.

No comments: