திண்டுக்கல்லில் ஈழத்தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்

சிறீலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டில் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்களில் சிலர் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.


இந்த போராட்டத்தில் பழனி புளியம்பட்டியிலுள்ள தஞ்சமடைந்தோர் முகாமைச் சேர்ந்த சுமார் 500இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழர் தாயகத்தில் நடைபெறும் இனப்படுகொலையின் கோரங்கள் அடங்கிய நிழற்படங்களையும், ஈழப்பிரச்சினையில் இந்திய அரசை தலையிடுமாறு கோரி எழுதப்பட்ட பதாகைகளையும் இவர் தாங்கியிருந்தனர்.


மாலை 5:00 மணிவரை நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பழனி பிரதேசத்தின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மக்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்திருக்கின்றார்.





No comments: