ஈழத்தமிழர் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே பொறுப்பு – வை.கோ

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளினால் இலங்கைத் தமிழர் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே பொறுப்பு சொல்ல வேண்டும்

என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.


தனிப்பட்ட ரீதியில் மன்மோகன் சிங் மீது தமக்கு அதிக மரியாதை இருப்பதாகவும், எனினும் பிரதமர் என்ற ரீதியில் அவரது தீர்மானங்கள் தமிழரை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக சட்டத்தரணிகள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் முன்னெடுக்கப்படும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் பொருளாதாரத் தடைகளை இலங்கை மீது விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகளை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: