யாழ்ப்பாணம் தென்மராட்சி முன்னரங்க நிலை பகுதியில் கடும் மோதல்

யாழ்ப்பாணம் தென்மராட்சி முன்னரங்க நிலைப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று புதன்கிழமையன்று கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் யாழ்ப்பாண ஏரியில் இடம்பெற்ற நேரடி மோதல்களை அடுத்தே இன்று இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது இரண்டு தரப்பினரும் தீவிரமான எறிகணை வீச்சுக்களில் ஈடுபட்டனர். அத்துடன் தென்மராட்சி முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாண ஏரிப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரவு சுமார் 2 மணித்தியாலங்களாகச் சண்டை இடம்பெற்றுள்ளது.
இலங்கைப் படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது நிலைகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசங்களின் மீது எறிகணை வீச்சுகளை நடத்தினர்.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் கரையோரங்கள் மற்றும் மண்டைதீவு ஆகிய இடங்களில் உள்ள இலங்கை படையினரின் நிலைகளின் மீது எறிகணை வீச்சுக்களை நடத்தினர்.
இந்தநிலையில் இரண்டு தரப்பிலும் மோதல்களின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

No comments: