சென்னையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி மாலையில் நடைபெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக - மஹிந்த அரசைக் கண்டித்து - சென்னையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி மாலையில் நடைபெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை வருமாறு:-நமது தமிழ் மக்கள் இலங்கையில் படும் தொல்லைகள், கொடிய துன்பங்களில் இருந்து விடுபட்டு இனப்படுகொலை நிறுத்தப்பட்டு நிலையான அமைதி காண்பதற்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆறு தீர்மானங்களையும் நினைவூட்டி வலியுறுத்திட அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் சென்னையில் மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடைபெறும்.சென்னையில் உள்ளவர்கள் மாத்திரமல்லாமல், பிற மாவட்டங்களில் உள்ளவர்களும் கலந்துகொள்ளக்கூடிய பிரமாண்டப் பேரணியாக அது அமையும் என்பதால் எல்லா மாவட்டங்களிலுமிருந்து வந்து கலந்துகொண்டு மனிதச் சங்கிலியைப் பெருமளவில் நடத்திட அனைத்துக் கட்சியினரும் குறிப்பாக மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

No comments: