வடபோர்முனையான யாழ். முகமாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.
முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் டாங்கி சூட்டாதரவுடகளுடன் பெருமெடுப்பில் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:30 மணி வரை தாக்குதல் நடத்தி படையினரின் முயற்சியினை முறியடித்தனர்.
இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment