சிங்கள அரசுகள் ஓர் வட்டத்திலிருந்து தமிழர் பிரச்சினையை நோக்குகின்றன – றோவின் முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா

இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் அனைத்துமே ஒர் வட்டத்திற்குள் இருந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் இந்திய றோ அமைப்பின் தலைவர் ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டங்களை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு ஒருபோதும் வழியமைக்காதென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆளுங்கட்சி மாவட்ட ரீதியான அதிகாரப் பரவலாக்களை முன்னிலைப்படுத்தி தீர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும், இதனை முழுக்க முழுக்க வெற்றிகரமான முயற்சியாக கருத முடிடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் கூர்ந்து அவதானித்து தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சர்வதேச மனித உரிமைகள் சட்டத் திட்டங்களின் அடிப்படையில் பயங்கரவாதிகளை கொன்று குவிக்கும் அதிகாரம் எந்தவொரு அரசாங்கத்திற்கும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட ரீதியான முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர பயங்கரவாதிகளை படுகொலை செய்வதற்கு எந்தவொரு நாட்டிற்கும் உரிமையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாதாரண குற்றவாளிகளைப் போன்றே பயங்கரவாதிகளும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பரவலாக்களின் மூலம் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தியா இலங்கை தமிழர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியதாகவும், எனினும் இலங்கைத் தமிழர்கள் சர்வதேச ரீதியான வலையமைப்பொன்றை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னணி அங்கில இணையதளமொன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியொன்றின் போது அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளின் மூலம் நிலப்பரப்புக்கள் கைப்பற்ற போதிலும் இனரீதியான கிளர்ச்சி மீண்டும் வெடிக்காதென்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாதென ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார்.

நன்றி : உலகத்தமிழ்ச்செய்திகள்.

No comments: