கஞ்சிகுடிச்சாறில் பொறிவெடித் தாக்குதலில் எஸ்.ரி.எவ் ஐச் சேர்ந்த ஒருவர் பலி



அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஊடுருவ முயற்சித்தனர்.

ஊடுருவ முயற்சித்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தினர்.

இதில் சிக்கிய அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

No comments: